உடன்குடி பற்றிய தன் பால்ய கால நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜவாஹிருல்லாஹ்!
''நான் இரண்டாம் வகுப்பு வரை உள்ளூ ரில் உள்ள பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் படித்தேன். எனது தாத்தா, தந்தை, பெரிய தந்தை மூவரும் இலங்கையில் வர்த்தகம் செய்தவர்கள். ஸ்ரீமாவோ - சாஸ்திரி உடன்பாட்டுக்குப் பிறகு இலங்கையில் ஏற்பட்ட சூழல் காரணமாக, சொந்த நாட்டுக்கே திரும்பிவிட்டனர். அதன் பிறகு, எனது தந்தை சென்னை கொத்தவால் சாவடியில் வியாபாரம் செய்ததால், சென்னைக்குக் குடிபெயர்ந்தோம். அதனால் நானும் சென்னைக்கு வர வேண்டிய தாயிற்று.