Sunday, June 5, 2016

சென்னை புத்தக கண்காட்சியில் நான் எழுதி புத்தொளி பதிப்பகம் வெளியிட்டுள்ள புத்தகங்கள்



சென்னை புத்தக கண்காட்சியில் நான் எழுதி புத்தொளி பதிப்பகம் வெளியிட்டுள்ள
1. பாலஸ்தீன வரலாறு
2. தித்திப்பான திருப்புமுனைகள்
3. 40 ஹதீஸ் குத்ஸீக்கள்

4. Wise Men on the Greatest of Men ஆகிய நூல்களை பின் வரும் அரங்குகளில் கிடைக்கும்

1.சென்னை ரஹ்மத் அறக்ககட்டளை அரங்கு எண் 136 மற்றும் 137
2. யூனிவர்சல் பப்ளிசர்ஸ் அரங்கு எண் 32 மற்றும் 33

குத்துச் சண்டை வீரர் முஹம்மது அலி - அவனிடமிருந்தே வருகிறோம். அவனிடமே திரும்பிச் செல்கிறோம்



உலகம் முழுவதும் அறியப்பட்ட குத்துச் சண்டை வீரர் முஹம்மது அலி மரணமடைந்துவிட்டார். (இன்னாலில்லாஹி வஇன்ன இலைஹி ராஜிஊன் -அவனிடமிருந்தே வருகிறோம். அவனிடமே திரும்பிச் செல்கிறோம்.)


கேசியஸ் கிளே வாக ஒரு கருப்பு நிறத்தவர் குடும்பத்தில் பிறந்து தனது தனித்துவமிக்க திறமையினால் உலகை தன் பக்கம் ஈர்த்தவர் முஹம்மது அலி.

கருப்பு நிற மக்களின் உரிமைக்காக வீரமிக்க குரல் கொடுத்த மால்கம் எக்ஸின் சந்திப்பு இவரது வாழ்வில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக முதலில் எலிஜா முஹம்மதின் நேசன் அப் இஸ்லாம் அமைப்பில் தன்னை சேர்ததுக் கொண்டார். எலிஜா முஹம்மதுின் சிந்தனை போக்கு தவறானது என்று உணர்ந்த மாலகம் எக்ஸ் அதிலிருந்து விலகிய போது முஹம்மது அலி எலிஜாவின் பக்கமே நின்றார். மால்கமை வெறுத்தார்.ஆனால் பிறகு தான் செய்தது தவறு என்று உணர்ந்து உண்மையான இஸ்லாமிய நெறியில் தன்னையும் இணைத்துக் கொண்டார்.

இது குறித்து பின்னாட்களில் முஹம்மது அலி பின்வருமாறு குறிப்பிடுகிறார்: