Sunday, September 2, 2012

அஸ்ஸாமில் கலவரம்-பிரச்னை திசை திருப்பப்பட்டது! - பேரா ஜவாஹிருல்லாஹ்:


அஸ்ஸாமில் போடோ இன மக்கள் மற்றும் சிறுபான்மையோருக்கு இடையே நடந்த மோதலில் எழுபதுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள். அந்தக் கோர சம்பவங்களைத் தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கில் வட கிழக்கு பகுதி மக்கள் உயிருக்கு பயந்து தங்கள் மாநிலங்களுக்குத் திரும்பினார்கள். இந்த நிகழ்வுகளை தங்கள் நோக்கில் அணுகி இங்கே கருத்து சொல்பவர்கள் மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற குழு தலைவரான பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் மற்றும் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்.