இலங்கைச் சிறையில் உள்ள தமிழக கைதிகள் 11 பேரையும் இந்தியா அழைத்துவருவதற்கான நடவடிக்கைகளை விரைவு படுத்துமாறு மனித நேய மக்கள் கட்சி தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழக அரசின் உள்துறை அலுவலகத்தில் இந்தக் கைதிகளின் கோப்புகள் தேங்கிக் கிடப்பதாலேயே தாமதமேற்பட்டுள்ளதாகவும் அக்கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான எம். எச். ஜவாஹிருல்லா சுட்டிக்காட்டியுள்ளார்.